Friday 21 February 2014

பைரவ வழிபாடு தேய்பிறை அஷ்டமி( 22.2.14 சனிக்கிழமை)

பைரவ வழிபாடு தேய்பிறை அஷ்டமி( 22.2.14 சனிக்கிழமை) 




சிவன் கோவில்களில், பைரவருக்கு என்று தனிச் சன்னதி உண்டு. ஈரோடு அருகே உள்ள சென்னிமலை பகுதியில் பைரவருக்கு தனியாக கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. 

 பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு தருவதாக கூறப்படுகிறது. பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில், பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தீராத தொல்லைகள் எதுவாக இருந்தாலும் தீர்ந்து வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயம்   இல்லை. 

 நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை தனித்தனி அகல் விளக்கில் ஊற்றி, தீபம் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றாமல் ஒவ்வொரு தீபத்தையும் தனித்தனியாக ஏற்றி வழிபாடு செய்து வந்தால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறுவதுடன், பைரவரின் பரிபூரணஅருளும் கிட்டும்.  








2 comments:

  1. அழகிய படங்களுடன், அருமையான அவசியமான ஒரு பகிர்வு! நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. mika nadri... ohm namashiyava... ohm hreem kalabharava namah

      Delete