Wednesday 11 September 2013

நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள்

நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள்

மூலவர்:நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள்

உற்சவர்    :        நித்யகல்யாணப்பெருமாள்

அம்மன்/தாயார்        :        கோமளவல்லித்தாயார்

 தல விருட்சம்   :        புன்னை, ஆனை


 தீர்த்தம்     :        வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம்

ஆகமம்/பூஜை :        வைகானஸம்

 பழமை     :        1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர்   :        வராகபுரி, திருவிடவெந்தை

 ஊர்  :        திருவிடந்தை

  மாவட்டம்        :        காஞ்சிபுரம்

 மாநிலம்   :        தமிழ்நாடு




மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

திவளும் வெண்மதி போல் திருமகத் தரிவை செழுங்க டலமுதினிற் பிறந்த அவளும், நின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசை விடாளால் குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லு நின்தாள் நயந்திருந்த இவளை உன் மணத்தா லென் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

 தல சிறப்பு:     
                     
          பெருமாளின் 108 திருப்பதிகளுள் இத்தலத்து பெருமாளுக்குத்தான் ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திருமணத்தடை உள்ள பெண்கள் இங்குள்ள தாயாரை வழிபட்டு பலன் பெறலாம்.

பொது தகவல்:
இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார். இவருக்கு மேல் உள்ள விமானம் கல்யாண விமானம். பெருமாளை மார்க்கண்டேயர் தரிசனம் செய்துள்ளார்.

பிரார்த்தனை

திருஷ்டி தோஷம், ராகு கேது தோஷம், சுக்ர தோஷம் , திருமணத்தில் தடை உள்ளவர்களுக்குரிய பரிகார தலம்.

தல வரலாறு:


திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் புதல்வன் பலி நல்லாட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸுமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய பலியின் உதவியை நாடினர். பலி மறுத்து விட்டான். இதனால் அரக்கர்கள் தேவர்களுடன் சண்டையிட்டு தோற்று, பின் பலியிடம் மீண்டும் உதவி கேட்டனர். அரக்கர்களுக்காக தேவர்களுடன் பலி சண்டையிட்டு வென்றான். இதனால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் போக்க பெருமாளை குறித்து இத்தலத்தில் தவமிருந்தான். தவத்திற்கு மெச்சிய பெருமாள் வராஹ ரூபத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து தோஷம் போக்கினார்

தினமும் திருமணம்
     ஒருமுறை குனி என்ற முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்ல தவம் இருந்தனர். குனி மட்டும் சொர்க்கம் சென்றார். அங்கு வந்த நாரதர் அந்தப் பெண்ணிடம்,""நீ திருமணமாகதாவள். எனவே உன்னால் சொர்க்கம் செல்ல முடியாது என்று சொல்லி அங்கிருந்த பிற முனிவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். காலவரிஷி என்பவர் அவளை திருமணம் செய்து கொண்டு 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். தன் பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நாராயணனை வேண்டி தவமிருந்தார். நாராயணன் வரவில்லை. ஒருநாள் ஒரு பிரம்மச்சாரி வந்தான். திவ்ய தேச யாத்திரைக்காக வந்ததாக கூறினான். அவனது தெய்வீக அழகு பெருமாளைப் போலவே இருக்கவே, தனது பெண்களை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞனை வேண்டினார். அவன் ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் திருமணம் செய்து கொண்டான். கடைசி நாளில் அந்த இளைஞன் தன் சுயரூபம் காட்டினான். அது வேறு யாருமல்ல. வராஹமூர்த்தி வடிவில் வந்த நாராயணன். அவர் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது இடப்பக்கத்தில் வைத்து கொண்டு சேவை சாதித்தார். திருவாகிய லட்சுமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன படியால் இத்லதலம் திருவிடவெந்தை எனப்பட்டது. இது காலப்போக்கில் மருவி திருவிடந்தை ஆனது.

No comments:

Post a Comment