Thursday 12 September 2013

சிவபெருமானின் பெயர்கள்

சிவபெருமானின் பெயர்கள்


சிவபெருமான் 10 வகையான பெயர்களால் அழைக்கப்படுகிறார். 
அவை: 

1. பவன்,

2. ருத்திரன், 

3. மிருடன், 

4. ஈசானன், 

5. தாணு, 

6. சம்பு, 

7. சருவன், 

8. உக்கிரன், 

9. பர்க்கன், 

10. பரமேசுவரன். 

பவன்    - தன்னிடமிருந்து எல்லாவற்றையும் உருவாக்குபவன். 

ருத்திரன்    - பிறப்பு, இறப்பு ஆகிய நோய்களை நீக்கி குற்றம் குறைகளைப் போக்குபவன். 

மிருடன்    - எல்லோருக்கும் சுகம் அளிப்பவன். அதேபோல் உரிய இடத்தில் சேரும்படி வைப்பவன். 

ஈசானன்    - தனக்கு மேலான யார் ஒருவரும் இல்லாதவன். 

தாணு    - சிறிதும் அசைவு இல்லாமல் நிலைபெற்று இருப்பவன். 

சம்பு    - உயிர்களுக்கெல்லாம் வீடு பேரின்பத்தினைக் கொடுத்து அருள்பவன். 

சருவன்    - கொடியவர்களைத் தண்டித்துக் கொல்பவன். 

உக்கிரன்    - சூரியன், சந்திரன் ஆகியவைகளின் தோற்றம் மற்றும் மறைவுக்குக் காரணமாக இருப்பவன். கடல்களை எல்லைக்குள் அடக்குபவன். ஐம்பூதங்களின் தோற்றம் மற்றும் ஒடுக்கங்களுக்குக் காரணமாக இருப்பவன். 

பர்க்கன்    - சூரியன், சந்திரன், அக்னி ஆகியவற்றுக்கு ஒளி கொடுப்பவன். காயத்ரி போன்ற மந்திரங்களால் வழிபடப் பெறுபவன். உயிர்களின் அறியாமை முழுவதையும் போக்கி அருள்பவன். 

பரமேசுவரன்    - ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்பவன். 

No comments:

Post a Comment